ஆதிக்கம்
இப்போது இந்திய அணியில் சிராஜ், சைனி, சாஹல், வாஷிங்க்டன் சுந்தர் போன்ற ஆர்சிபி வீரர்களும், மயங்க் அகர்வால், ராகுல் போன்ற முன்னாள் ஆர்சிபி வீரர்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கோலியிடம் நட்பாக இருக்கும் பும்ரா, பாண்டியா போன்ற சில மும்பை வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது .
வாய்ப்பு
இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணியில் கோலி ஆதிக்கம் செலுத்துகிறார் என்று புகார்கள் எழுந்தது . ஆஸ்திரேலிய தொடருக்கு எதிரான இந்திய அணி தேர்வு கூட விமர்சனங்களை சந்தித்தது. இப்படிப்பட்ட நிலையில் கோலி தேர்வு செய்த அணிதான், அதிலும் பெரும்பாலான ஆர்சிபி வீரர்கள்தான் தற்போது இந்திய அணியின் வெற்றிக்கு உதவி உள்ளனர்.
வெற்றி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல கோலி தேர்வு செய்த அணிதான் உதவியது. இந்த நிலையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி தேர்விலும் கோலியின் முடிவே முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேற்று மாலை இதற்காக மீட்டிங் நடந்தது. வெறும் 30 நிமிடம் மட்டுமே இந்த மீட்டிங் நடந்தது.
கோலி
இந்த மீட்டிங்கில் நீண்ட நேரம் கோலி மட்டுமே பேசியுள்ளார். நான் சொல்லும் அணியை எடுங்கள். இந்த வீரர்கள்தான் அணியில் இருக்க வேண்டும் என்று நேற்று மீட்டிங்கில் கோலி கறாராக கூறியுள்ளார். கோலி தேர்வு செய்யும் வீரர்கள் நன்றாக ஆடுவதால் தேர்வுக்குழுவும் இவரின் பரிந்துரையில் மாற்றம் செய்யவில்லை.
வீரர்கள்
கோலி பரிந்துரையின் அடிப்படையில் பிரித்வி ஷா போன்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மயங்க் அகர்வால், ராகுல் போன்றவர்கள் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர். வாஷிங்க்டன் சுந்தரும் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ளார்.
அணி தேர்வு
முழுக்க முழுக்க கோலியின் விருப்பத்தின் படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் நேற்று வெளியானது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பாண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.