ரிஷப் பன்ட்டின் போட்டோ
அதனை தொடர்ந்து தற்போது ரிஷப் பன்ட் பதிவிட்ட போட்டோவில், புவனேஸ்வர் குமார், தவான், ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் பதிவிடப் பட்ட சில மணி நேரத்தில் வைரலாகியது. அதை பார்த்த ரசிகர்கள், கேப்டன் கோலி அப்போது எங்கு போனார்? எங்கிருக்கிறார் என்று கேள்விகளை எழுப்பினர்.
ரோகித் எங்கே?
அந்த விவகாரம் தற்போது அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறது. அந்த காரியத்தை கோலி ஒரு போட்டோவை ரிலீஸ் செய்து தொடங்கி வைத்து இருக்கிறார். அதில் இந்த முறையும் ரோகித் இல்லை.
இதுதான் ஸ்குவாட்
மேலும் அதனை ஸ்குவாட் (அதாவது விளையாடும் அணி) என்று குறிப்பிட்டு உள்ளார். எனவே மீண்டும் கோலி, ரோகித் பிளவு குறித்து ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.
ரசிகர்கள் குழப்பம்
ஏற்கனவே அணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ரசிகர்கள் ஏகத்துக்கும் குழம்பி உள்ளனர். அணியில் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கோலியின் புதிய போட்டோவும் இப்போது ஒரு ரவுண்டு வர, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கின்றனர்.