தாக்குதல்
இதனிடையே, விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் சர்மா அறிவித்துள்ளார்.
ரத்து செய்த பிசிசிஐ
அவர் கூறியதாவது:டெல்லியை சேர்ந்த சேவாக், கம்பீர் மற்றும் கோலியை கவுரவிப்பது என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் புல்வாமா தாக்குதல் காரணமாக ஐபிஎல் தொடக்க விழாவை பிசிசிஐ ரத்து செய்திருந்தது.
நிதி அளிக்க முடிவு
ஆகவே... நாங்களும் இந்த பாராட்டு விழாவை ரத்து செய்துள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி அளிப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்.
டிக்கெட்டுகள் தீர்ந்தன
ஏற்கனவே 90 சதவீதம் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டன. சர்வதேச போட்டி நடக்கும் போது, தேசத்துக்காக உயிர்நீத்தவர்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம் என்று அவர் கூறினார். டெல்லி கிரிக்கெட் சங்கமானது முதல் முறையாக மாநிலத்திலிருந்து அனைத்து முன்னாள் சர்வதேச வீரர்களுக்கும் விஐபி பாஸ் வழங்குகிறது.