கோலிக்கு கவுரவம்
இந் நிலையில், டெல்லியை சேர்ந்தவரான விராட் கோலியின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானமான பெரோஷா கோட்லாவின் ஒரு ஸ்டாண்டுக்கு விராட் கோலி பெயர் வைக்கப்படுகிறது.
ஆக.18ல் அறிமுகம்
2008ம் ஆண்டு, ஆகஸ்ட் 18ம் தேதியன்று இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் கோலி அறிமுகமானார். அதனை நினைவுபடுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 பேர்
கோலியை போன்றே முன்னாள் 2 டெல்லி வீரர்களான பிஷன் சிங் பெடி, மொகிந்தர் அமர்நாத் ஆகியோரின் பெயர்களில் ஸ்டாண்டுகள் உள்ளன. ஆனால் அவர்களின் ஓய்வுக்கு பின்தான் இத்தகைய கவுரவத்தை பெற்றனர்.
அதிரடி மன்னன் சேவாக்
ஆனால் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கும் போதே அந்த கவுரவத்தை பெறும் நபராகிறார். முன்னாள் அதிரடி மன்னன் சேவக், அஞ்சும் சோப்ரா ஆகியோரின் பெயர்களில் கோட்லா மைதானத்தில் கேட்கள் உள்ளன.