கேப்டன்
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்த தொடரை இந்தியா வெல்ல ரஹானேவின் பார்முலா
ஒன்று முக்கிய காரணமாக இருந்தது. ரஹானேவை பொதுவாக பவுலர்களின் கேப்டன்
என்று கூறுவார்கள். பேட்ஸ்மேன்களை விட பவுலர்களுக்கு அதிக முக்கியத்துவம்
இவர் கொடுப்பார். பவுலர்களை அதிக அளவில் ரஹானே ஆதரிப்பார்.
கோலி
ஆனால் கோலி பவுலிங்கை விட பேட்டிங்கிற்கு அதிகம் முக்கியத்துவம்
கொடுப்பார். 4 பவுலர்கள் இருந்தால் போதும் என்று நினைப்பவர் கோலி. இரண்டு
ஸ்பீட் பவுலர்கள், இரண்டு ஸ்பின் பவுலர்கள் போதும் என்று நினைப்பவர் கோலி.
ஆனால் ரஹானே கூடுதல் பவுலர்களை கேட்பார்.
ரஹானே
ரஹானே 5 பவுலர்களுடன் ஆடுவதை விரும்ப கூடியவர். அதனால்தான் ஆஸ்திரேலிய
தொடரில் கோலி வெளியேறிய பின் பேட்ஸ்மேனை இறக்காமல் பவுலிங் ஆல் ரவுண்டரான
ஜடேஜாவை ரஹானே இறக்கினார். 6 பேட்ஸ்மேன்கள் 5 பவுலர்கள் இருந்தால் நன்றாக
இருக்கும் என்று நினைக்க கூடியவர் ரஹானே.
ரஹானே பார்முலா
ரஹானேவின் இந்த 5 பவுலர்கள் பார்முலா ஆஸ்திரேலிய டெஸ்டில் பெரிய அளவில்
உதவியது. ஆஸ்திரேலியாவை வீழ்த்த ரஹானேவின் இந்த பவுலிங் படைதான் முக்கிய
காரணமாக இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக இதே பார்முலாவை
கோலி பயன்படுத்த போகிறார் என்கிறார்கள். 5 பவுலர்கள் கான்செப்ட் வெற்றிபெற்றுவிட்டது.
கான்செப்ட்
இதனால் இனி 4 பவுலர்களுடன் களமிறங்கினால் அது கோலிக்கு சிக்கலாகும். இதனால்
வேறு வழியின்றி 5 பவுலர்களை இறக்க கோலி முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கண்டிப்பாக 5
பவுலர்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.