பாதிப்பு
தோனி இல்லாத நிலையில் அவரது பார்ம் மங்கி வருகிறது. இடையே அணியில் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் இளம் வீரர் என்பதோடு நிறைய தவறுகள் செய்ததும் பந்துவீச்சாளர்களை பாதித்தது. இப்படிப்பட்ட சூழலில் தான் தோனி அணியில் ஆடினால் நன்றாக இருக்கும் என கூறி உள்ளார் குல்தீப் யாதவ்.
தோனி விடுப்பு
தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவராகவே இந்திய அணியை விட்டு விலகி இருப்பதாக கூறப்பட்டது. நீண்ட காலம் இந்திய அணியில் ஆடாத நிலையில், அவரது பிசிசிஐ ஒப்பந்தம் கூட ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் வர முயற்சி?
இந்த நிலையில், அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முயற்சி செய்து வருகிறார் எனவும், 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி அணியில் அவர் நுழைவார் எனவும் கூறப்பட்டது. அதே போல, எப்போதும் இல்லாத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் அசத்தினார் தோனி.
கொரோனா வைரஸ் தாக்கம்
இதற்கிடையே, கொரோனா வைரஸ் உலகில் பெரிய அச்சுறுத்தலாக மாறி அனைத்து மக்களையும் வீட்டில் முடக்கி வைத்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் பாதிக்கப்பட்டன. கிரிக்கெட் போட்டிகளும் தடைப்பட்டுள்ளன. 2020 ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடக்குமா? என்பதே சந்தேகத்தில் உள்ளது.
டி20 உலகக்கோப்பையில் சந்தேகம்
இந்த நிலையில், தோனி தன் பார்மை நிரூபிக்காமல் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதனால், 2020 டி20 உலகக்கோப்பை தொடரிலும் தோனி இடம் பெற முடியாது என்றே தெரிகிறது.
மூத்த வீரர் தோனி
இந்த நிலையில், குல்தீப் யாதவ் தோனி இல்லாததை தான் உணர்வதாகவும், மூத்த வீரர்களோடு ஆடும் போது ஒரு பிணைப்பு ஏற்படும். அதனால், அவர் இல்லாததை தான் வெகுவாக உணர்வதாக கூறினார். குல்தீப் யாதவ்வுக்கு தோனி ஆலோசனை கூறி, அவர் விக்கெட் எடுத்த நிகழ்வுகள் மிக மிக அதிகம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அணியில் ஆட வேண்டும்
தோனியின் ஓய்வை பொறுத்தவரை அது அவரது தனிப்பட்ட முடிவு. அதை அவரிடமே விட்டு விட வேண்டும். அதில் விவாதம் செய்ய வாய்ப்பே இல்லை. அதே சமயம் அவர் ஃபிட்டாக இருக்கிறார். அவர் இந்தியாவுக்கு ஆட வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். அவர் ஆடினால் எங்களுக்கு எளிதாக இருக்கும் என இளம் வீரர்கள் சார்பாக கூறினார் குல்தீப் யாதவ்.