தர்மசேனா கருத்து
இந்நிலையில் அந்த முடிவு குறித்த தமது கருத்தை தர்மசேனா இப்போது கூறி இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதாவது: அந்த முடிவு தவறு தான் என்று ஒத்துக் கொள்கிறேன். இக்கட்டான நேரத்தில் பல முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.
எல்லாம் கவனிக்க வேண்டும்
உடனுக்குடனேயே டிவியில் அதனை எங்களால் பார்க்க முடியாது. பேட்ஸ்மேன் அடித்த உடன் பந்து எங்கே செல்கிறது? எப்படி பீல்டிங் செய்கிறார்கள்? அதற்குள் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன் ஓடுகிறார்கள்? என அனைத்தையும் கவனிக்க வேண்டும்.
தவறு தான்
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இதுபோன்ற ஒரு தவறு நடந்து விட்டது. ஆனால் அதை பற்றி நான் வருந்தவில்லை. வருத்தப்பட போவதும் இல்லை. மேலும் ஐசிசி அப்படி ஒரு முடிவினை கொடுத்ததற்கு என்னை பாராட்டி உள்ளது என்றார்.
நடவடிக்கை வேண்டும்
ஆனால், ஒரு நடுவரின் தவறு ஒரு அணியின் கனவினையே சிதைத்து விட்டது. தவறான முடிவையும் அறிவித்துவிட்டு, அதை ஏற்றுக் கொண்ட பின்னரும் இவ்வாறு ஆணவத்துடன் பேசுவது எந்த வகையில் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதுபோன்ற தவறுகளை செய்யும் நடுவர்கள் மீது, ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.