டெல்லி : உலக கோப்பை நாயகன் கபில் தேவ்விற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. அவர் டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 1978ல் முதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடிய கபில்தேவ், தொடர்ந்து வெற்றி நாயகனாக வலம்வந்தது குறிப்பிடதக்கது.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் ஹார்ட் அட்டாக் காரணமாக டெல்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருடைய தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் இதுவரை எதுவும் கூறவில்லை. ஆயினும் அவருக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1978ல் தனது முதல் போட்டியை இந்திய அணிக்காக விளையாடிய கபில் தேவ், இந்தியாவின் உலக கோப்பை கனவை நனவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.