அசத்தல் பவுலிங்
ஆனாலும் இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. மதுரை பவுலர்களின் கட்டுக்கோப்பான பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் திருச்சி பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது.
143 ரன்கள்
பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அருண் கார்த்திக் மற்றும் சரத் ராஜ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சரத் ராஜ், ஆதித்யா கிரிதர், அருண் கார்த்திக் ஆட்டமிழந்தனர்.
விக். வீழ்ச்சி
இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் கவுசிக் 35 ரன்களும், மிதுன் 12 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது.
சூப்பர் ஓவரில் வெற்றி
இதனால் ஆட்டம் டை ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ், 12 ரன்களே எடுத்தது. அடுத்து வந்த திருச்சி 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 3 ரன்களே எடுக்க மதுரை பாந்தர்ஸ் வென்றது.