மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
1997ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் கண்டவர் இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனே. கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒரு நாள் போட்டியில் இருந்தும், 2014-ம் ஆண்டு உலக கோப்பையுடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2017ல் நடக்கவுள்ள ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியின் முழுநேர பயிற்சியாளராக ஜெயவர்தனா செயல்படுவார் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு முன் பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார்.