ஐசிசி
இந்த நிலையில் ஐசிசி, கிரிக்கெட் போட்டிகளை பெண்கள் மத்தியில் பிரபலப்படுத்த உலகம் முழுக்க சிறிய நாடுகளுக்கு இடையில் டி20 போட்டி நடத்தி வருகிறது. இந்த நிலையில் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள சின்ன நாடான மாலியில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இரண்டு அணிகள்
மாலி பெண்கள் அணியும், ருவாண்டா பெண்கள் அணியும் இந்த டி 20 போட்டியில் மோதிக்கொண்டது. இந்த போட்டி தொடக்கத்தில் இருந்தே மிகவும் வித்தியாசமாக சென்றது. மாலி அணியின் தொடக்க வீராங்கனை மரியம் சமாங்கே மட்டும் அந்த அணியில் ஒரு ரன் எடுத்து அவுட்டானார்.
எல்லோரும் அவுட்
அதன்பின் களமிறங்கிய மாலி அணி வீராங்கனை எல்லோரும் வரிசையாக அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். மொத்தமாக 9.4 ஓவரில் அந்த அணி மொத்தமாக அவுட்டானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த அணி மொத்தமாக எடுத்ததே 6 ரன்கள்தான்.
மிக மோசம்
அதிலும் அந்த அணியில் இருந்து வீராங்கனைகள் 9 பேர் டக் அவுட்டானார்கள். ஒரே ஒரு ரன் மட்டும்தான் ஓடி எடுக்கப்பட்டது. மீதம் உள்ள ரன்கள் எல்லாம் வைட் மூலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் வெற்றி
இதை எளிதாக ருவாண்டா அணி அடித்து வென்றது. இதன் மூலம் ஐசிசி டி20 பெண்கள் போட்டியில் மாலி அணி புதிய மோசமான சாதனை படைத்து இருக்கிறது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக சீனா எடுத்திருந்த 14 ரன்கள் ஸ்கோர்தான் மிக குறைவான ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.