சான்ஸ் போச்சு
இந்தியாவுடனான தொடர் தோல்வியால், 2019ல் நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. கடைசி போட்டியில் வென்றாலும், வெஸ்ட் இன்டீஸ் அணியின் அடுத்த ஆட்டங்களைப் பொறுத்தே, நேரடியாக நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
சாப்பிடுங்க பாஸ்
விளையாட்டெல்லாம் ஒருபுறம் இருக்க, தனது இந்திய நண்பர்களுக்கு விருந்தளித்து அசத்தினார் மலிங்கா. மைதானத்தில், வேகம், ஆக்ரோஷம் ஆகியவை இருந்தாலும், மைதானத்துக்கு வெளியே நண்பர்களாக பழகுவதுதான், உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு அழகு.
மும்பை மலிங்கா
அந்த வகையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், மும்பை அணிக்காக விளையாடி வரும் மலிங்கா, இந்திய வீரர்கள் பலருடன் இணைந்து ஏற்கனவே விளையாடியுள்ளார்.
நண்பேன்டா
ரோஹித் சர்மா,, ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் படேல், அஜிங்கியா ரகானே ஆகியோருடன், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளதால், அவர்களுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.
நாளை கடைசி போட்டி
நாளை கடைசி போட்டி நடக்க உள்ள நிலையில், நேற்று இரவு, இந்திய வீிரர்களுக்கு தனிப்பட்ட முறையில் விருந்து அளித்து தனது நட்பை வெளிப்படுத்தினார் மலிங்கா.
கோஹ்லி மகிழ்ச்சி
கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர், மலிங்காவுடன் எடுத்தப் படங்களை பேஸ்புக், டுவிட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.