மோசமான பிட்ச்சால் பாதிப்பு
உலகப் புகழ்பெற் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானம் சமீப காலங்களாக மோசமான பிட்ச் காரணமாக மிகுந்த சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. இதில் விளையாட வீரர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
மோசமான பிட்ச்சால் சர்ச்சை
கடந்த 2017ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளின்போது, இந்த மைதானத்தின் பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததால் வீரர்கள் அந்த போட்டியில் விளையாட திணறினர்.
சராசரியாக மதிப்பீடு
இதையடுத்து மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச்சை மோசமானதாக ஐசிசி வரையறை செய்திருந்தது. இந்தியாவிற்கு எதிரான போட்டியை தொடர்ந்து இந்த மைதானம் சராசரியாக மதிப்பிடப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது.
துவக்க தினத்திலேயே நின்ற போட்டி
இந்நிலையில் மெல்பெர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஷெபீல்டு ஷீல்ட் போட்டி துவக்க தினத்திலேயே ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் இந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்தளிப்பு
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் ஆடத் துவங்கிய நிலையில், பேட்ஸ்மேன் மீது எதிரணியினர் வீசிய பந்து தாக்கியதை அடுத்து அம்பயர்கள் மற்றும் மைதான நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு போட்டியை ரத்து செய்து இரு அணிகளுக்கும் புள்ளிகளை சமமாக பகிர்ந்தளித்தனர்.
நடைபெறுமா என கேள்வி
மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தின் மோசமான நிலையை அடுத்து, அங்கு 3 வாரங்களுக்கு பிறகு நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.