4வது சதம்
நல்ல பந்தை தொடாமல் விட்டும், மோசமான பந்தை அடித்து ஆடியும் மாயங் அகர்வால் ரன்கள் சேர்த்தார். குறிப்பாக இந்திய வீரர்களை அச்சுறுத்திய ஏஜாஸ் பட்டேலின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டார் மாயங் அகர்வால். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 4வது சதத்தை மாயங் விளாசினார்
தனி மரியாதை
ஒரு நல்ல டெஸ்ட் வீரர் சதம் அடிப்பதுடன் நிறுத்திவிடாமல், அதனை பெரிய ஸ்கோராக மாற்றுவார்கள். கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேன் 12 முறை இரட்டைசதம் விளாசியுள்ளார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு தனி மரியாதை உண்டு
ஜாம்பவான்கள்
இந்திய அணியின் தொடக்க வீரர் மாயங் அகர்வால் தற்போது 4 சதத்தை விளாசியுள்ளார். இதில் மூன்று முறை 150 ரன்களை தாண்டி அடித்துள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சேவாக் 8 முறையும், கவாஸ்கர் 6 முறையும் 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
ஆபத்து
தற்போது இந்த பட்டியலில் மாயங் அகர்வால் இணைந்துள்ளார். மாயங் அகர்வால் அந்நிய மண்ணிலும் சிறப்பாக விளையாடினால், அவருக்கு என தனி இடம் இந்திய அணியில் கிடைத்துவிடும். மாயங் அகர்வாலின் சதத்தால் தற்போது கே.எல்.ராகுலின் இடத்திற்கு பாதிப்பு வந்துள்ளது.