போட்டிக்கு பில்டப்
ஐபிஎல் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போன்ற மோதல் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல் தான் எனும் அளவுக்கு இந்த போட்டிக்கு பில்டப் கொடுக்கப்பட்டு வருகிறது.
காரணம் என்ன?
அதற்கு காரணம், அதிக ரசிகர்களை கொண்ட மும்பை, சென்னை ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக ரசிகர் படையைக் கொண்ட அணிகள். மேலும், இரு அணிகளும் மூன்று முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி உள்ளனர்.
தவிடு பொடியாக்கிய ரசிகர்கள்
இந்த நிலையில் மும்பையில் நடக்கும் போட்டி என்பதால் மைதானத்தில் மும்பை அணிக்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி உள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் (தோனி ரசிகர்கள்?!).
“சிஎஸ்கே, சிஎஸ்கே”
மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்த போது, ரசிகர்கள் "சிஎஸ்கே, சிஎஸ்கே" என முழக்கமிட்டனர். இதே போன்ற நிலை தான் டெல்லி போட்டியிலும் ஏற்பட்டது. அப்போது டெல்லி அணிக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் சென்னை அணிக்கு ஆதரவு அதிகமாக இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தது.
தோனியே காரணம்
ஆனால், அதிக ரசிகர்கள் பலம் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் தன் சொந்த மண்ணிலேயே பாவமாக காட்சி அளித்தது. காசை கொடுத்து டீமை வாங்கலாம்.. பாசத்தை வாங்க முடியுமா?