3வது டெஸ்ட்
இரு அணிகளும் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் அகமதாபாத் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக செயல்பட்டது. இதனால் இந்திய அணி அவர்கள் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானாலும் பிட்ச் தயார் செய்கிறது எனக்குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு ஒருபுறம் ஆதரவும் மற்றொரு புறம் எதிர்ப்பும் கிளம்பியதால் சர்ச்சையாக மாறியது.
விமர்சனம்
இன்று 4வது டெஸ்ட் போட்டியின் போது கோலியிடம் பிட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், எங்களின் வெற்றிக்கு நாங்கள் எந்த ஒரு பிட்ச்-ஐயும் குறை சொல்லாமல் ஆடுவது தான் காரணம். நாங்கள் அதுபோன்ற பிட்ச்களில் தான் அதிகம் ஆட ஆசைப்படுவோம். அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும். இதுபோன்று பிட்ச் குறித்து ஒரு தலைபட்சமாக பேச அவர்களுக்கு எப்படி தோன்றுகிறது என தெரியவில்லை' எனக்கூறினார்.
மீண்டும் சர்ச்சை
கோலியின் இந்த கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில் அவர், முதல் டெஸ்டில் விராட் கோலி அவுட்டாகி வெளியேறிய போது அவர், பிட்ச் மிகவும் தட்டையாக உள்ளதாக கூறினார். அதற்கு பெயர் பிட்ச் குறித்து குறை கூறுவது இல்லையா? என மைக்கேல் வாகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்டம்
ஒரு புறம் பிட்ச் சர்ச்சை இருக்கும் நிலையில் இன்றை டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்ஷர் பட்டேல் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.