மும்பை: மிட்சேல் ஜான்சன் ஒரு ஸ்பெஷல் கிரிக்கெட் வீரர் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி பவுலர் மிட்சேல் ஜான்சன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
இதுகுறித்து சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில், "ஜான்சன் ஒரு ஸ்பெஷல் பவுலர். அவரது ஆக்ரோஷ பந்து வீச்சை ரசித்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் 2வது டெஸ்ட் போட்டியோடு, ஜான்சன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.