எப்படி
3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைய சிஎஸ்கேவும், ஐபிஎல் தொடரும் மறைமுக காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி ஸ்பின் பிட்சில் நடந்தாலும் நேற்று இங்கிலாந்து அணி ஒரே ஒரு முழு நேர ஸ்பின் பவுலரை மட்டுமே பயன்படுத்தியது. லீச் மட்டுமே முழு நேர ஸ்பின் பவுலர்.
ரூட்
பகுதி நேர ஸ்பின் பவுலர் ஜோ ரூட் நேற்று சிறப்பாக பவுலிங் செய்து ஐந்து விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து அணியில் அனுபவ ஸ்பின் பவுலர் மொயின் அலி இல்லாமல் போனதே இதற்கு காரணம் என்கிறார்கள். இவர் டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் வெளியேறிவிட்டார். டாம் பெஸ் ஓய்வில் இருப்பதால் அவரையும் களமிறக்க முடியவில்லை.
மோசம்
இதனால் இருக்கிற ஸ்பின் பவுலர்களை வைத்து களமிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு இங்கிலாந்து அணி தள்ளப்பட்டது. இங்கிலாந்து வீரர் மொயின் அலி ஐபிஎல் போட்டிக்காகவே தற்போது டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இவர் கடந்த ஜனவரியில் இருந்து கொரோனா பயோ பபுளில் இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் ஆடினால் அதன்பின் ஐபிஎல் பயோ பபுளில் இவர் நேரடியாக இணைய வேண்டி இருக்கும் .
கஷ்டம்
இதனால் ஐபிஎல்லில் ஆடுவதை மனதில் வைத்து இங்கிலாந்து அணியில் இருந்து மொயின் அலி வெளியேறினார். இதை ரூட்டும் மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இன்னொரு பக்கம் நேற்று ஆலிவ் போப்பிற்கு பதிலாக சாம் கரன் ஆட வேண்டும். அவரும் ஐபிஎல்லை மனதில் வைத்து கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆட உள்ளார். இதனால் இங்கிலாந்து அணி இரண்டு முக்கியமான வீரர்களை இழந்தது.
சிஎஸ்கே
இல்லையென்றால் நேற்று மொயின் அலி ஆடி இருக்க வாய்ப்புள்ளது. அதிலும் மொயின் அலி, சாம் கரன் இரண்டு பேருமே சிஎஸ்கே வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர் பயோ பபுள் மற்றும் ரொட்டேஷன் பாலிசி காரணமாக இங்கிலாந்து அணி முழுமையான பிளேயிங் 11ஐ அறிவிக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது.