இந்தியா அணி நிலை
2000த்தின் இறுதியில் இந்திய அணி அசாருதீன் - சச்சின் டெண்டுல்கர் என கேப்டன்களை மாற்றிக் கொண்டே இருந்தது. நீண்ட காலம் கேப்டனாக இருந்த அசாருதீன் கேப்டன்சியில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் திணறியது.
இந்திய அணியின் எதிர்காலம்?
சச்சினும் ஒரு கட்டத்தில் தன் கேப்டன்சியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதே நேரத்தில் இந்திய அணியில் அசாருதீன் மீது மேட்ச் பிக்ஸிங் புகார் கிளம்பவே இந்திய அணியின் எதிர்காலம் கேள்விக் குறியானது. இதற்கிடையே கேப்டனாக நியமிக்கப்பட்டவர் தான் சவுரவ் கங்குலி.
கங்குலிக்கு எதிர்ப்பு
கங்குலியை துணை கேப்டனாகக் கூட நியமிக்கக் கூடாது என அப்போது பிசிசிஐயில் விவாதம் நடந்ததாக ஒரு தகவல் உண்டு. இந்த நிலையில், பலரது எதிர்ப்பையும் மீறித் தான் கேப்டன் ஆனார் கங்குலி. இந்திய அணியை மிக சிறப்பாக வளர்த்தார்.
தள்ளி வைக்கப்பட்ட கங்குலி
கங்குலி மூத்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கவில்லை என துவக்கத்தில் இந்திய அணியில் இருந்தே சில ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டு இருந்தார். அது அசாருதீன் கேப்டன்சியில் தான் நடந்தது. இந்த நிலையில், அசாருதீன் எப்படி கங்குலியை உருவாக்கினார்?
அசாருதீன் பங்கு
ஆனால், அப்படித் தான் கூறி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப். கங்குலியை கேப்டனாக உருவாக்கியதில் அசாருதீன் பங்கு மிகவும் அதிகம். அதன் பின் சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் அவர் கேப்டன்சியில் ஆடினார்கள் என்றார் லத்தீப்.
அசாருதீன் கங்குலியை உருவாக்கினார்
மேலும், அசாருதீன் தான் கங்குலியை உருவாக்கினார். தோனி, அவர்கள் இருவரின் குணங்களை இணைத்து, தன் ஸ்டைலை கொண்டு வந்தார். தோனியின் கேரியர் ஒரு வகையில் கங்குலியை சார்ந்தே இருந்தது என்றார் ரஷித் லத்தீப்.
நம்ப முடியாத தகவல்
முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீப் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. அசாருதீன், கங்குலி இடையே நல்ல நட்பு உள்ளது என்றாலும், கங்குலியை உருவாக்கியது அவர் தான் யாரும் நம்ப முடியாத தகவலை கூறி இருக்கிறார் லத்தீப்.