டெல்லி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தி சிறந்த பேட்ஸ்மேன், பினிஷராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் ஆல் -ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.
இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அவர் வேண்டாம்.. முக்கிய வீரரை கழற்றி விடும் பிசிசிஐ.. நடராஜனுக்கு அடிக்க போகும் இன்னொரு அதிர்ஷ்டம்?
இந்நிலையில் குறைந்த ஓவர்கள் வடிவத்தில் மட்டுமின்றி ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் தொடரிலும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கையிப் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைநழுவியும் டி20 தொடரை வெற்றி கொண்டும் உள்ளது. இந்த தொடர்களின் வெற்றிக்கு அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக உள்ளார். இந்நிலையில் இவரை குறைந்த ஓவர்களில் மட்டுமின்றி டெஸ்ட் தொடரிலும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கையிப் அறிவுறுத்தியுள்ளார்.
குறைந்த ஓவர்களில் சராசரியாக 90 ரன்களை கொண்டு, விராட் கோலியை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி வருவதை சுட்டிக் காட்டியுள்ள கையிப், அவரை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சேர்க்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.