3வது ஒருநாள் சர்வதேச போட்டி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் கட்டாக்கில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஷமியை புகழ்ந்து தள்ளிய மூத்த வீரர்
இந்தியா -மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் வர்ணனையில் ஈடுபட்ட இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், பௌலர் முகமது ஷமியை புகழ்ந்து தள்ளினார்.
ஷமி குறித்து சுனில் கவாஸ்கர்
இந்திய பௌலர் முகமது ஷமி தனக்கு எப்போதுமே மேற்கிந்திய தீவுகளின் மால்கம் மார்ஷலை நினைவுப்படுத்துவதாக இந்த வர்ணனையின்போது சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
மால்கம் மார்ஷல் குறித்து கவாஸ்கர்
ஆழ்ந்த தூக்கத்தில் தான் இருந்தாலும் தன்னை தூங்கவிடாமல் செய்பவர் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த மால்கம் மார்ஷல் என்று சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஷமியை பாராட்டிய கவாஸ்கர்
முகமது ஷமி பௌலிங் குறித்து சுனில் கவாஸ்கர் எப்போதுமே சிறப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். முன்னதாக ஷமி வேட்டைக்கு செல்லும் சிறுத்தை போன்று பௌலிங் செய்யும்போது காணப்படுகிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கபில் குறித்து கவாஸ்கர்
உலகக் கோப்பையை வென்ற இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ், இந்தியாவின் வேகப்பந்து வீச்சை மாற்றியவர் என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.