சிராஜ்-க்கு பின்னடைவு
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வியை விட, வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு தான் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பவுலிங், ஃபீல்டிங் என இரண்டிலுமே மிக மோசமாக உள்ளார். ஆட்டத்தின் 38வது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய பந்தை க்ளாசன் தூக்கி அடித்தார். மிட் விக்கெட் திசையில் இருந்த சிராஜுக்கு நன்கு நிதானமாக பிடிக்க நேரம் இருந்தது. எனினும் கைக்கு வந்த அழகான கேட்ச்-ஐ தவறவிட்டார். இது க்ளாசன் 74 ரன்கள் அடிப்பதற்கு காரணமானது.
பவுலிங்கிலும் தடுமாற்றம்
தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரிலும் சிராஜின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டதால் ஆட்டத்தின் முடிவே மாறியது. பவுலிங்கை பொறுத்தவரையில் நேற்றைய போட்டியில் 8 ஓவர்கள் வீசி 49 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். எனினும் எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.
பெரும் பின்னடைவு
இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடருக்கு செல்வதற்கான கதவுகளை அவரே மூடிக்கொண்டது போல் அமைந்துள்ளது. பும்ராவுக்கு மாற்று வீரராக தீபக் சஹார் - சிராஜ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் சிராஜ் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே தன்னை நிரூபித்துவிட்டார். ஆனால் சிராஜ் சொதப்பி வருவதால் தேர்வுக்குழு அவரை திட்டத்தில் இருந்து நீக்கவுள்ளதாக தெரிகிறது.
ஷமி நிலைமை
இது ஒரு புறம் இருக்க, இந்திய சீனியர் வீரர் முகமது ஷமி பெங்களூரு தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். ஒருவேளை அவர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டால் ஷமி தான் பும்ராவுக்கான மாற்று வீரராக தேர்வாவார் என்பது குறிப்பிடத்தக்கது.