இறுதி டெஸ்ட்
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இளம் வீரர் சிராஜ் ஸ்பின்னர்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் 2 விக்கெட்களை எடுத்தார்.
கோலி மோதல்
ஆட்டத்தின் 13வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அப்போது களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் சிராஜிடம் ஏதோ கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த இந்திய அணி கேப்டன் கோலி, ஸ்டோக்ஸுடம் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோலி, தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி ஆக்ரோஷமாக பேசத்தொடங்கியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விளக்கம்
இது குறித்து ஆட்டத்தின் இறுதியில் பேசிய சிராஜ், நான் ஆட்டத்தின் 13ஆவது ஓவரை வீசிவிட்டு, பீல்டிங் செய்யச் சென்றபோது பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பென் ஸ்டோக்ஸ் என்னிடம் சீண்டும் வகையில் பேசினார். நான் உடனே விராட் கோலியிடம் புகார் தெரிவித்தேன். அவரும் உடனே பென் ஸ்டோக்ஸிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்ட நிலையில் நடுவர்கள் வந்து சமாதானம் செய்தனர். பெரிய விஷயம் இல்லை, என தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
இது குறித்து பேசிய கமெண்ட்ரி பாக்ஸில் இருந்து பேசிய க்ரீம் ஸ்வான், கோலி தான் ஸ்டோக்ஸுடம் பிரச்னை செய்துள்ளார். கோலி அவரின் விளையாட்டை பார்க்க வேண்டும். இன்று அவர் செய்தது சிறுபுள்ளை தனமாக இருந்தது என தெரிவித்திருந்தார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் தான் சிராஜ்-ஐ சீண்டியதாக தற்போது தெரியவந்துள்ளது.