திறப்பு
புனரமைப்பு பணிகளுக்கு பின் புது பொலிவுடன் இந்த மோதேரா மைதானம் இன்று திறக்கப்பட்டது. இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பேர் வரை அமர முடியும். கடந்த வருடம் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி இங்குதான் நடத்தப்பட்டது.
பெயர்
9 பிட்ச்கள் அடங்கிய இந்த மைதானம் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் திறக்கப்பட்டது. இதற்காக இன்று காலை பெரிய அளவில் மோதேரா மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது .
இந்த மோதேரா மைதானத்திற்கு முன்பு சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது .
மோடியின் பெயர்
இந்த நிலையில் மோதேரா மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நடக்க உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே இதுதான் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும்.
பிங்க் பால்
இங்கு இன்று நடக்கும் முதல் போட்டியே பிங்க் பால் போட்டியாகும். இதனால் இந்த ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பல பிரபலங்கள் இன்று நடக்கும் போட்டியை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.