சேவாக் பாராட்டு
கிரிக்கெட் விளையாடும் போது தோனிக்கும், சேவாக்கிற்கும் மோதல் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதனை சுக்கு நூறாக உடைத்தது போல் டிவீட் போட்டுள்ள சேவாக், ஒரு முற்றுப் புள்ளி இல்லாமல் வாக்கியம் முடிவு பெறாது. அதே போல் தான் தோனியும், ஆட்டமிழக்காத வரை போட்டியும் முடியாது என்று சேவாக் கூறியுள்ளார். தோனி போன்ற ஒரு நபர் கிடைக்க மற்ற அணிகளுக்கு கொடுத்து வைக்கவில்லை என்றும் சேவாக் பாராட்டினார்.
பெரிய அண்ணன்
இதே போன்று, தோனிக்கும், ரெய்னாவுக்கும் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது சின்ன தல ரெய்னா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தோனியை தனது பெரிய அண்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். என் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் ஆதரவாளராகவும், ஆசிரியராகவும் இருந்துள்ளார். உங்களுக்கு இறைவன் நல்ல உடல் நலத்தை தர வேண்டுகிறேன் என்று ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.
ஜாம்பவான்கள்
கங்குலி போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்று கற்று கொடுத்தார். ஆனால் தோனி அதனை பழக்க வழக்கமாகவே மாற்றிவிட்டார். இந்திய கிரிக்கெட்டை வடிவமைத்த இரண்டு ஜாம்பவான்களும் ஒரு நாள் இடைவெளியில் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கெயிப் கூறியுள்ளார். மஹி பாய் தலைமையின் கீழ் விளையாடியது மிகவும் மறக்க முடியாத அனுபவம் என்று ரஹானே குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், தோனியின் ஈடு இணையற்ற சாதனைகள் எளிய கிராமப்புற இளைஞர்களின் கனவை அடைய நம்பிக்கை தரும். மீண்டும் சென்னை அணிக்காக நீங்கள் விளையாடுவதை எதிர்நோக்கி காத்துள்ளேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி என்று குறிப்பிட்டுள்ளார்.