ஆயுர்வேத மருத்துவம்
தற்போது ஓய்வில் இருக்கும் தோனிக்கு, காலில் மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வரும் தோனி, இதற்காக ஆங்கில மருத்துவரிடம் செல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தை தேர்வு செய்துள்ளார். அதுவும் ஜார்க்கண்டில் காட்டுக்கு நடுவில் உள்ள ஒரு மருத்துவரிடம் தோனி சென்றுள்ளார். ராஞ்சியிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாபுங் என்ற இடத்தில் தான் அந்த மருத்துவர் வசிக்கிறார்.
மூட்டு வலிக்கு சிகிச்சை
தோனியின் பெற்றோர்களுக்கு வயது மூப்பால் ஏற்படும் கால், கை வலிகளுக்கு வண்டான் சிங் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, அவர்களுக்கு வலியிலிருந்து நிவாரணம் கிடைத்துள்ளது. இதனை அறிந்த தோனி, தாமும், தனது மூட்டு வலிக்கு சிகிச்சை எடுக்க கடந்த ஒரு மாதமாக வண்டான் சிங்கை சென்று பார்க்கிறார்.
சிகிச்சை அளித்தேன்
தோனிக்கு சிகிச்சை அளித்து அனுபவத்தை கூறும் வண்டான் சிங், முதலில் எனக்கு தோனியை அடையாளம் தெரியவில்லை. யாரோ வருகிறார்கள் என்று நினைத்தேன். தோனிக்கு கால்சியம் சத்து குறைப்பாடு காரணமாக தான் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருந்துகளை அளித்துள்ளேன்.
வெறும் ரு.40 தான்
சிகிச்சைக்கு 20 ரூபாய், மருந்துக்கு 20 ரூபாய் என மொத்தம் 40 ரூபாய் தான் அதற்கு ஃபிஸ்சாக வாங்கினேன். தோனியை பார்க்க தற்போது நிறைய பேர் கூடி விடுகிறார்கள். இதனால் அவரை காரிலேயே உட்கார வைத்து மருத்துவம் பார்த்து அனுப்பிவிடுகிறோம் என்று வண்டான் சிங் கூறியுள்ளார். தோனி மருத்துவம் பார்த்து சென்றதும், தற்போது அந்த மருத்துவர் தேசிய அளவில் பிரபலமாகிவிட்டார்.