இறுதி ஓவர்களில் ஆட்டம்
வழக்கம்போலவே டெத் ஓவர்கள் வரை நிதானமாக இருந்த தோனி, கடைசி 2 ஓவர்களில் அடித்து ஆடி ரன்களை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 160 ரன்கள் எடுத்தது.
திருப்புமுனை பவுலிங்
161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் மற்றும் மயங்க் அகர்வாலை அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி ஹர்பஜன் சிங் திருப்புமுனையை ஏற்படுத்தினார். பின்னர் ராகுலும் சர்ஃபராஸ் கானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.
சென்னை வெற்றி
ஆனால் அந்த அணி 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வென்ற சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
முக்கிய காரணம்
ஆட்டம் முடிந்த பிறகு பேசிய தோனி, அணியின் வெற்றிக்கு ஹர்பஜன் பந்து வீச்சு முக்கிய காரணம் என்றார். அவர் கூறியதாவது: யுனிவர்ஸ் பாஸ் கெய்லை தொடக்கத்திலேயே அவுட்டாக்கிவிட்டோம்.
ஸ்கோர் கிடையாது
அவர் மட்டும் அதிரடியாக ஆடியிருந்தால், 200 ரன்கள் அடித்திருந்தால் கூட வெற்றி பெற முடியாது. 160 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது. ஆனாலும், கெய்ல், மயங்க் அகர்வால் இருவரையும் விரைவிலேயே வீழ்த்தினார் ஹர்பஜன் சிங்.
முக்கியமானது
அவர் வீழ்த்திய அந்த இரண்டு விக்கெட்டுகள் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமானது. அந்த விக்கெட்டுகள் மட்டும் விழாவிட்டால், 160 ரன்கள் என்பது பெரிய ஸ்கோரே அல்ல, அணி தோல்வியை சந்தித்திருக்கும் என்று கூறினார்.