மும்பை : மும்பை இந்தியன்ஸ் வீரர் லசித் மலிங்கா மிகப்பெரிய வெற்றியாளர் என்று அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
டி20, லீக் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லசித் மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி மிஸ் செய்யும் என்று கேப்டன் ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் லசித் மலிங்கா தற்போது ஐபிஎல் 2021 சீசனிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டி20 மற்றும் லீக் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு அறிவித்துள்ளதை அடுத்து இந்த முடிவை மும்பை இந்தியன்ஸ் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பல்வேறு வெற்றித் தருணங்களுக்கு கைகொடுத்தவர் மலிங்கா.
இந்நிலையில் லசித் மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி கண்டிப்பாக மிஸ் செய்யும் என்று அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லசித் மலிங்காவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, உண்மையான வெற்றியாளர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.