ஜெகதீசன்
தமிழக வீரர் ஜெகதீசன் தொடர்ந்து முதல் தரப்போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். சையது முஷ்டாக் தொடரில் இவர் மிகவும் சிறப்பாக ஆடினார். தமிழ்நாடு அணி பல போட்டிகளில் வெற்றிபெற இவர்தான் காரணமாக இருந்தார்.
அதிரடி
இந்த நிலையில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டியிலும் இவர் சிறப்பாக ஆடி வருகிறார். இதுவரை நடந்த 5 போட்டியிலும் ஜெகதீசன்தான் தமிழக அணிக்காக சிறப்பாக ஆடிய வீரர். இன்று தமிழ்நாட்டிற்கும் விதர்பாவிற்கும் இடையில் ஆட்டம் நடந்தது.
கலக்கல்
இதில் விதர்பா ஆணை 41 ஓவரில் 141 ரன்கள் எடுத்து அவுட் ஆனது. இதை தமிழ்நாடு அணி வெறும் 11.2 ஓவரில் சேஸ் செய்து வெற்றிபெற்றது. இதில் ஜெகதீசன் அதிரடியாக 48 ரன்கள் எடுத்தார்.
வெறி
வெறும் 18 பந்தில் இவர் 48 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் ஜெகதீசன் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். இவரின் இந்த பார்ம் சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.