எத்தனை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஆஸி. வீரர்களின் உடலை குறி வைத்து தாக்கும் வகையில் பவுலிங் செய்து வருகிறார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸி பவுலர்கள் தொடர்ந்து இந்திய வீரர்களை தாக்கும் வகையில் பவுலிங் செய்தனர். இந்திய பேட்ஸ்மேன்களை குறி வைத்து தொடர்ந்து பவுலிங் செய்தனர்.
தாக்கி காயம்
உடலை தாக்கி காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பவுலிங் செய்தனர். வயிறு மற்றும் நெஞ்சு உயரத்திற்கு பவுலிங் செய்தனர். இதனால்தான் இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, ஷமி போன்ற வீரர்கள் காயம் அடைந்தனர். இந்திய அணியில் இப்படி ஆக்ரோஷமாக தாக்க கூடிய வீரர்கள் யாரும் இல்லை.
சைனி
சைனி மட்டுமே தனது பவுன்சர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை தாக்கும் வகையில் பவுலிங் செய்வார். ஆனால் காயம் காரணமாக சைனி இன்று அதிகமாக ஓவர்களை வீசவில்லை. இதையடுத்து சைனியின் பணி இன்று நடராஜனுக்கு கொடுக்கப்பட்டது. பேட்ஸ்மேன்களை குறி வைக்கும் டாஸ்க் நடராஜனுக்கு கொடுக்கப்பட்டது.
நடராஜன்
அதை நடராஜன் தற்போது வரை சிறப்பாக செய்து வருகிறார். நடராஜன் வீசிய ஒரே ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் மூன்று முறை வயிற்றில் அடி வாங்கினார். துல்லியமான உயரத்தில் நடராஜன் வீசிய பந்து நேரடியாக கிரீன் வயிற்றில் சென்று அடித்தது.
ஸ்மித்
இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தும் இதேபோல் நடராஜன் பவுலிங்கில் இரண்டு முறை காயம் அடைந்தார். ஆஸ்திரேலிய பவுலர்கள் அட்டாக்கிங் பவுலிங் செய்வது போல நடராஜனும் செய்து வருகிறார். வயிற்றில் லேசாக காயம் அடைந்த கிரீன் கொஞ்சம் திணறி வருவதும் குறிப்பிடத்தக்கது.