பேட்டி
கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைனுக்கு ரஹானே இந்திய அணியின் டீ சர்டை பரிசாக வழங்கினார். அந்த போட்டி ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைனுக்கு 100வது போட்டியாகும். இதனால் அவரை பாராட்டும் வகையில் ரஹானே அவருக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கினார்.
ஸ்லெட்ஜிங்
இந்திய வீரர்களை மோசமான வார்த்தைகள் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து தாக்கி வந்தனர். பல முறை ஸ்லெட்ஜிங் செய்து மோசமாக நடந்து கொண்டனர். ஆனால் ரஹானே ஒரு கேப்டனாக, ஒரு மனிதனாக ஆஸ்திரேலிய வீரர் ஒருவருக்கு இந்திய அணியின் ஜெர்சியை பரிசளித்து அசத்தினார். தற்போது நாதன் லைன் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நன்றி
இந்திய அணிக்கும், கேப்டன் ரஹானேவிற்கும் நன்றி. வீரர்களில் கையெழுத்து இடப்பட்ட இந்திய அணியின் ஜெர்சியை கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்களின் உயர்ந்த குணத்தை இது காட்டுகிறது. என்னுடைய கலெக்சனில் இது இடம்பெறும், நன்றி, என்று நாதன் லைன் குறிப்பிட்டுள்ளார்.
வைரல்
இந்திய வீரர்கள் கையெழுத்திட்டு கொடுத்த ஜெர்சியை நாதன் லைன் வெளியிட்டுள்ளார். அதில் இளம் வீரர் பண்ட் ஸ்மைலி ஒன்றை வரைந்து கையெழுத்திட்டு இருந்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. பண்ட் களத்தில் எப்போதும் குறும்பாக செயல்படுவார்.
பாடல்
போட்டிக்கு இடையே ஸ்பைடர் மேன் பாடல் பாடுவார். குறும்பாக ஏதாவது பேசி கிண்டல் செய்வார். இந்த நிலையில் இன்னொரு வீரருக்கு கொடுத்த பரிசிலும் இப்படி அவர் ஸ்மைலி வரைந்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. பண்டிற்கு எப்பவுமே விளையாட்டுதனம்தான் என்று அவரை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.