அக்கறையில்லையா?
இங்கிலாந்து தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு ஏராளமான காயங்கள் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பிசிசிஐ வீரர்கள் உடல் நலனில் என்ன அக்கறை கொண்டுள்ளது என்ற கேள்விகள் எழுந்தன.
ஒண்ணுமே சரியில்லை
தேசிய கிரிக்கெட் அகாடமியில் எடுக்கப்படும் பரிசோதனைகள் பெங்களூருவில் இருக்கும் ஏதோ ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி முடிவுகள் பெறப்படுவதாக கூறப்படுகிறது. யார் அதை ஒழுங்குபடுத்துகிறார்கள் என்பதும் தெரியவில்லை என கூறுகின்றனர்.
ஐபிஎல் அணியிடம் உதவி
இந்தியா ஏ கிரிக்கெட் வீரர் ஒருவர், தனக்கு காயம் ஏற்பட்ட போது இங்கே வந்துள்ளார். இங்கே அகாடமியில் அவர்கள் செய்யும் கந்தரகோல வேலைகளை பார்த்து பயந்து போன அந்த வீரர், தன் ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் உதவி பெற்று வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
கெஞ்சி கூப்பிட்டும் வர மறுத்த வீரர்
அதே போல, சமீபத்தில் இங்கிலாந்து தொடர் முடிந்து இந்தியா வந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர், காய்ச்சல் வந்த போது தன் ஊரில் இருந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து அவரை கெஞ்சி கூப்பிட்டும், அங்கே சிகிச்சை சரியாக இருக்காது என்பதால், அவர் அங்கு செல்ல மறுத்துள்ளார். இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது பிசிசிஐ-இன் வீரர்கள் அக்கறை என சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.