புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரில் இன்றைய தினம் பௌலிங் செய்துள்ளார் நடராஜன்.
இன்றைய போட்டியில் இங்கிலாந்தின் முக்கிய ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்சை வீழ்த்தியுள்ளார்.
கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்சை வீழ்த்தியதன்மூலம் இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்வை அவர் தடுத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 3வது மற்றும் வெற்றியை தீர்மானிக்கும் இன்றைய போட்டியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக நடராஜன் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
கடந்த போட்டியில் 52 பந்துகளில் 99 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இந்நிலையில் இன்றைய ஆட்டத்திலும் அவர் 35 ரன்களுடன் அதிரடி பார்ட்னர்ஷிப்பிற்கு தயாரான நிலையில் அவரை அவுட்டாக்கினார் நடராஜன்.