139 ரன்கள் எடுத்தது
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில், குர்னீ 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கொல்கத்தா முதலிடம்
தொடக்க வீரரான லின் 50 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான சுனில் நரேன் 47 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அந்த அணி 13.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பு 140 ரன்கள் குவித்து அபார வெற்றிபெற்றனர். இதன்மூலம் கொல்கத்தா அணி 8 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
ரகானே பேட்டி
தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறியதாவது: போட்டியில் 150 முதல் 160 ரன்கள் வரை அடித்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும். பந்துவீச்சில் சரியான திட்டங்களை செயல்படுத்த வில்லை.
சரியாக ஆடவில்லை
மேலும், பேட்டிங் வரிசையிலும் ஸ்மித் ஒருவரை தவிர நாங்கள் யாரும் அதிரடியாக ஆட வில்லை.இதுபோன்ற மைதானங்களில் விளையாட மேலும் பயிற்சி எடுக்க வேண்டும்.
அதுதான் காரணம்
தவறுகளை திருத்தி, வேகமாக ரன்களை குவித்து அடுத்த போட்டியில் தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு வருவோம். மேலும், 20 ஓவர் போட்டிகளில் பொறுமையான இன்னிங்ஸ் ஆடக் கூடாது, அதுவே தோல்விக்கு காரணம் என்று ரகானே கூறினார்.