மும்பை இந்தியன்ஸ்
ஐ,பி.எல். பாணியில் இந்த தொடரை நடத்த திட்டமிட்ட அமீரக கிரிக்கெட் வாரியம், அணிகளை ஐ.பி.எல். அணிகளுக்கு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, அந்த தொடரில் புதிய அணியை வாங்கியது. இந்த தொடரிலும், ஊர் பெயருடன் இந்தியன்ஸ் என்று இணைத்து அணிக்கு பெயர் சூட்டப்பட உள்ளது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஏற்கனவே கே.கே.ஆர். அணி மேற்கிந்தியத் தீவுகளின் நடைபெறும் சி.பி.எல்.தொடரில் ஒரு அணியை வாங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த நிலையில் புதிய தொடரிலும் ஒரு அணியை ஷாரூக்கான் வாங்கியுள்ளார். இதே போன்று டெல்லி கேப்டல்ஸ் அணியும் ஒரு அணியை வாங்கியுள்ளது. மான்செஸ்டர் யுனைடட் அணி நிர்வாகமும், அமீரக கிரிக்கெட் தொடரில் முதலீடு செய்துள்ளது
பின்வாங்கிய சி.எஸ்.கே
உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதால், அமீரக கிரிக்கெட் வாரியம் புதிய அணியை வாங்கி கொள்ள சி.எஸ்.கே. விற்கும் அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று கொண்டு அணி வாங்கம் நடவடிக்கையில் சி.எஸ்.கே.வும் ஈடுபட்டது. ஆனால், கடைசி நேரத்தில் முதலீடு செய்ய விருப்பமில்லை என்று கூறி சி.எஸ்.கே. நிர்வாகம் வெளியேறியது.
இந்திய வீரர்களுக்கு அனுமதி
உலகம் முழுவதும் பல்வேறு டி20 தொடர்கள் நடந்தாலும் அதில் இந்திய வீரர்கள் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி அளிப்பதில்லை. ஆனால் அமீரக கிரிக்கெட் உடன் பி.சி.சி.ஐ. நல்ல உறவில் உள்ளது. மேலும் ஐ.பி.எல். தொடர்களை அமீரக கிரிக்கெட் வாரியம் துபாயில் நடத்த உதவியும் செய்தது. இதனால் புதிய தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்க பி.சி.சி.ஐ. அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐ.பி.எல். அணிகள் இந்த தொடரில் புதிய அணிகளை வாங்கியதால் இந்திய வீரர்கள் புதிய தொடரில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.