3வது டி20 போட்டி
இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 66 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்து படு மோசமாக தோற்றது. இதன் மூலம் 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 13வது முறையாக டி20 தொடரை கைப்பற்றி யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் வலம் வருகிறார்கள்.
சாண்ட்னர் எச்சரிக்கை
இந்நிலையில் இதுகுறித்து எதிரணி கேப்டன் சாண்ட்னர் எச்சரித்துள்ளார். அதில், இது ஏமாற்றம் தான். ஆனால் இந்தியாவுக்கு பாராட்டு கூறியே ஆக வேண்டும். இந்திய வீரர்களில் சிலர் சரியான நேரத்தில் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். பவர் ப்ளேவிலேயே 5 விக்கெட்களை இழந்த பிறகு வெற்றி பாதைக்கு செல்வது கடினம் ஆகும். இந்திய அணி முதல் சில ஓவர்களுக்கு நிதானமாக நேரம் எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் அதிரடி காட்டினர்.
உலகக்கோப்பை எச்சரிக்கை
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் நேரத்தில் இந்தியாவில் நிறைய பனிப்பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். அப்போது டாஸ் வெல்லும் அனைத்து அணிகளுமே பந்துவீச்சை தான் தேர்வு செய்வாரகள். இந்தியாவில் சிறப்பான பிட்ச்-களை நாங்கள் பார்த்தோம். உலகக்கோப்பை நடக்கும் அக்டோபர் மாதமும் இதே போல இருந்தால் நன்றாக இருக்கும். அப்போது 400 ரன்களுக்கெல்லாம் செல்லாது, 320 ரன்களுக்குள் முடிந்தவரை சுருட்டிவிடுவோம் என சாண்ட்னர் கூறியுள்ளார்.
அடுத்த தொடர் எப்போது?
இந்திய அணிக்கு அடுத்ததாக ஜூன் மாத சூழலில் தான் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரவுள்ளது. அடுத்தகாக ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இது பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்பின் ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என ஜூன் மாதத்தின் இறுதி வரை வேறு வடிவ போட்டிகள் உள்ளன.