8 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா
நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாட பாகிஸ்தான் அணி அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கிறிஸ்ட் சர்ச்சில் குவாரன்டைனில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபட்டநிலையில் அவர்களில் 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.
பல்வேறு கெடுபிடிகள்
கொரோனா காரணமாக நியூசிலாந்து நாட்டில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆரம்பம் முதலே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கொரோனா பாதிப்புகள் அந்த நாட்டில் 2000க்கும் கீழ் உள்ளது. தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
நியூசிலாந்து குற்றச்சாட்டு
இந்நிலையில பாகிஸ்தான் வீரர்கள் விதிமுறைகளை மதித்து நடக்கவில்லை என்றும் தொடர்ந்து அவர்களுக்கு இடைவெளிகளில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்த நியூசிலாந்து சுகாதாரத்துறை தொடர்ந்து ஹோட்டல் அறைகளிலேயே அவர்கள் தங்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
நியூசிலாந்து எச்சரிக்கை
இதனிடையே, தொடர்ந்து விதிமுறைகளை மீறி நடந்து கொண்டால், தொடர் கேன்சல் செய்யப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பான சூழல் நிலவியது. முன்னாள் பாகிஸ்தான் வீரர் அக்தர் உள்ளிட்டோர் இந்த எச்சரிக்கைக்கு கண்டனம் விதித்திருந்தனர்.
அனுமதி மறுப்பு
இந்நிலையில் குவாரன்டைனை முடித்த நிலையிலும் பாகிஸ்தான் வீரர்கள் கிரிககெட் பயிற்சிகளை மேற்கொள்ள நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர்களிடையே தொடர்ந்து கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதாகவும் தற்போது பயிற்சிக்கு அனுமதி கொடுத்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை
தற்போது எடுக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிககையில் கூறப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி இரு அணிகளுக்கிடையில் முதல் டி20 போட்டி துவங்கவுள்ளது. அதேபோல 26ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சேர்க்கப்பட உள்ளது.