டி 20 போட்டி
இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையில் டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது டி 20 போட்டிகளில் நியூசிலாந்து வென்று இருந்த நிலையில் இன்று மூன்றாவது டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. இன்று போட்டி நடப்பதற்காக நேப்பியர் மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
பாதி போட்டி
இந்த நிலையில் இந்த டி 20 போட்டி, பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் சூரிய ஒளி. ஆம் கூடுதல் சூரிய ஒளி காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது சூரிய ஒளி சுட்டு எரித்தது.
வெளிச்சம்
அதேபோல் வெளிச்சமும் மிக அதிகமாக இருந்தது. இதனால் அங்கு பேட்டிங் செய்த வீரர்கள் பந்தை பார்க்க முடியாமல் திணறினார்கள். அதேபோல் பீல்டர்களும் பந்தை கேட்ச் பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். இதனால் மைதானத்தில் இரண்டு அணி வீரர்களும் திணறினார்கள்.
பவுலர்கள்
பவுலர்களும் சரியாக பிட்சை கணிக்க முடியவில்லை. ஏன் நடுவர்களும் கூட கண் கூசியதால் கஷ்டப்பட்டனர். இதையடுத்து அதிக சூரிய ஒளி காரணமாக 11.4 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. பின் சூரியன் மறைந்த பின் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.
இரண்டாவது முறை
பொதுவாக மழை காரணமாக போட்டி தடைபடும். ஆனால் நியூசிலாந்து நேப்பியர் மைதானத்தில் மட்டுமே வெயில் காரணமாக போட்டிகள் தடைபடுகிறது. கடந்த வருடமும் இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி வெயில் காரணமாக ஒரு ஓவர் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.