வரும் வெள்ளிக்கிழமை துவக்கம்
இலங்கை, ஆஸ்திரேலியா தொடர்களை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ள இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு மூன்று வடிவங்களிலும் இந்தியா -நியூசிலாந்து அணிகள் போட்டியிடவுள்ள நிலையில், முதல் டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக போட்டி
ஆண்டின் முதல் இரண்டு தொடர்களை வெற்றி கொண்டுள்ள இந்தியா, நியூசிலாந்து தொடர்களையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
3 வடிவங்களில் மோதல்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 போட்டி தொடரின் முதல் போட்டி வரும் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ளது. இரு அணிகளும் 5 சர்வதேச டி20 போட்டிகள், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளன.
இந்திய அணி குறித்து பாராட்டு
இந்நிலையில் இந்தியா அனைத்து வடிவங்களிலும் மிகவும் வலிமையான அணியாக உள்ளதாக நியூசிலாந்தின் பயிற்சியாளரும் முன்னாள் ஆல்-ரவுண்டருமான கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
3ல் இரண்டில் வெற்றி பெற வேண்டும்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் படு மோசமான தோல்வியை கண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்தியாவிற்கு எதிரான 3 தொடர்களில் இரண்டில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஸ் மார்க் வாங்க முடியும் என்றும் மெக்மில்லன் கூறியுள்ளார்.
இந்தியாவுடனான டி20 போட்டிகள்
இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவுடனான 5 டி20 போட்டிகள் மிகவும் முக்கியமானது என்றும் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.