பஸ் பிரேக் டவுன்
அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற பேருந்து மலைப்பாதையில் பிரேக் டவுன் ஆனது. இதனால் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் சிறிது நேரம் தவித்து விட்டனர்.
வீரர்கள் மீட்பு
அதன் பிறகு விஷயம் இலங்கை அணி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களை அனுப்பி அங்கிருந்து வீரர்களை மீட்டனர்.
|
வீடியோ வெளியீடு
பின்னர் அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டல் அறைக்கு அழைத்து வரப் பட்டனர். இந்த விஷயத்தை நியூசிலாந்து அணியின் மேனேஜர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் வீரர்கள் மனோநிலை எப்படி இருந்தது என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போ வைரல்.
ஏற்கனவே நடந்தது
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மிகப்பெரிய மசூதி ஒன்றில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த வங்கதேச வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அதுமுதலே நியூசிலாந்து வீரர்கள் ஒருவித அச்சத்தில் இருந்து வருகின்றனர். இலங்கை பயணத்தில் நடுவழியில் பேருந்து ரிப்பேரானதால் ஒரு கணம் ஆடிப் போயினர்.