சென்னை : ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த தொடர் எங்கே நடைபெறும் என்ற தெளிவு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் இந்தியாவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடர் எங்கே நடத்தப்படும் என்ற தெளிவை பிசிசிஐ ஏற்படுத்தவில்லை என்று எஸ்ஆர்எச் வழிகாட்டி விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் வழக்கம்போல நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏலம் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது 8 ஐபிஎல் அணிகளும் போட்டிகளுக்காக தயாராகியுள்ளது. அடுத்ததாக எந்த இடத்தில் மற்றும் எப்போது ஐபிஎல் தொடர் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடர் எங்கே நடைபெறும் என்பது குறித்த தெளிவை பிசிசிஐ ஏற்படுத்தவில்லை என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வழிகாட்டியும் முன்னாள் வீரருமான விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார். ஆனால் தொடருக்கு தேவையான சிறப்பான ஏற்பாடுகளை பிசிசிஐ மேற்கொள்ளும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.