லண்டன் : வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வரை உள்ளூர் போட்டிகள் எவையும் நடத்தப்படாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இங்கிலீஷ் சீசன் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த அறிவிப்பு சர்வதேச போட்டிகளுக்கு பொருந்தாது என்பதால் வரும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதிவரை உள்ளூர் போட்டிகள் எவையும் நடத்தப்படாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலீஷ் சீசன் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்டின் அறிவிப்பில் சர்வதேச போட்டிகள் குறித்த எதுவும் கூறப்படாத நிலையில், இங்கிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் தொடரின் சுற்றுப்பயணம் ஜூலையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆகஸ்ட் மாதத்தில் ஆண்கள் மற்றும் மகளிரின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த போட்டிகளின் போது சமூக விலகலை கடைபிடித்து குறைந்த அளவிலான ரசிகர்களை அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச போட்டிகள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
என்னங்க முடிவெடுக்கறதுல என்ன தடுமாற்றம்... சட்டுபுட்டுன்னு எடுக்க வேண்டாமா?
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இசிபியின் சிஇஓ டாம் ஹாரிசன், அனைத்து தளங்களிலும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் வீரர்களின் பாதுகாப்புக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.