For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் வருத்தப்பட்டு ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை: ஜாகீர்கான் நெகிழ்ச்சி பேச்சு

By Veera Kumar

மும்பை: நான் எதையும் மிஸ் செய்வதாக உணரவில்லை, மகிழ்ச்சியோடுதான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன் என்று இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்தார்.

NO REGRET, NO MISSING LINK IN CAREER SAYS ZAHEER KHAN

ஜாகீர்கான் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்த நிலையில், மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. சச்சினும் அதில் பங்கேற்றார். அப்போது ஜாகீர் கூறுகையில், "நான் எதையும் மிஸ் செய்யவில்லை. கிரிக்கெட்டில் விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டேன். எனவே மகிழ்ச்சியோடுதான் ஓய்வு பெறுகிறேன்.

நான் கிரிக்கெட்டில் இந்த அளவுக்கு முன்னேறி சாதனைகள் படைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அச்சாதனைகளுக்காக எனது சக வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரசிகர்கள் என்மீது வைத்துள்ள அன்பு நெகிழச் செய்கிறது. இவ்வாறு ஜாகீர் கான் தெரிவித்தார்.

Story first published: Tuesday, October 27, 2015, 10:16 [IST]
Other articles published on Oct 27, 2015
English summary
Former India Pacer Zaheer Khan, who recently retired from international cricket, today said that he has achieved everything he wanted to in his career spanning 14 years and there was 'no missing link' for him to regret.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X