டி20 தொடரின் 2வது போட்டி
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான நேற்றைய இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி 19.4 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியாவின் இலக்கை வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
ஸ்டம்ப் அவுட் மிஸ்
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் கேப்டன் ஆரோன் பின்ச்க்கு பதிலாக மாத்யூ வேட் கேப்டனாக பொறுப்பு வகித்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஷிகர் தவானை ஸ்டம்ப் அவுட் செய்ய முயற்சித்த வேட்டின் முயற்சி அவருக்கு கைகொடுக்கவில்லை.
|
ஜோக்கடித்த மாத்யூ வேட்
ஸ்வெப்சனின் பௌலிங்கில் வேட் இந்த அவுட்டை மிஸ் செய்தார். இதையடுத்து ஷிகர் தவானிடம் மேத்யூ வேட் தான் தோனி போல வேகத்துடன் கீப்பிங்கை மேற்கொள்ளவில்லை என்று ஜோக்கடித்தார். இதையடுத்து மைதானத்தில் ஷிகர் தவானும் சிரிப்புடன் தனது பேட்டிங்கை தொடர்ந்தார்.
அரைசதம் அடித்த தவான்
இந்த 2வது டி20 போட்டியில் தவான் அடித்த அரைசதம் மற்றும் விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவின் ரன்கள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கும் மற்றும் தொடர் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. ஷிகர் தவான் 52 ரன்களை அடித்து ஆடம் சம்பாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.