அரைசதம் அபாரம்
அதனடிப்படையில் 4வது போட்டியில் தவான் களம் இறங்கினார். 5வது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் தென் ஆப்ரிக்கா ஏ உடனான ஆட்டம் பற்றி தவான் கூறியிருப்பதாவது:
ரசித்து விளையாடினேன்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரானது சிறந்த பயிற்சி ஆட்டம் என்று கருதுகிறேன். நீண்ட நாட்களுக்குப்பின் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து 2 அரைசதங்கள் அடித்தது சிறப்பு. மிகவும் ரசித்து விளையாடினேன்.
ஓய்வு கிடைக்கிறது
தென் ஆப்ரிக்கா தொடருக்கு முன் எனக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி ஆட்டம் என்பது தெரியும். டெஸ்ட் போட்டியில் நான் விளையாடாததால் போதுமான ஓய்வு கிடைக்கிறது.
என்ன சிந்தனை?
களத்தில் இறங்கி விளையாடுவதைத் தவிர வேறும் எந்த சிந்தனையும் இப்போது என்னிடம் இல்லை.அணியில் உள்ள இளைய வீரர்களும் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர் என்றார்.