இஷாந்த் சர்மா காயம்
ரஞ்சிக் கோப்பை போட்டிக்காக கடந்த மாதம் 20ம் தேதி டெல்லி அணி சார்பில் களமிறங்கிய இஷாந்த் சர்மா, விதர்பா அணிக்கு எதிராக மோதினார். அப்போது ஒரு பந்தை எதிர்கொண்டபோது அவருக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் 6 வார காலங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.
நியூசிலாந்து டெஸ்ட்டில் விளையாட்டு
இந்நிலையில் நேற்று என்சிஏவில் நடைபெற்ற பிட்னஸ் தேர்வில் கலந்துகொண்ட இஷாந்த் சர்மா அதில் தேறியுள்ளார். இதையடுத்து நியூசிலாந்திற்க எதிராக வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா இணைந்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் தற்போது கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
|
இஷாந்த் சர்மா மகிழ்ச்சி
இந்நிலையில் தான் பிட்னஸ் பரிசோதனையில் தேர்ச்சி அடைவதற்கு உறுதுணையாக இருந்த என்சிஏ தலைவர் ஆஷிஷ் கௌசிக்கிற்கு இஷாந்த் சர்மா டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். தனக்கு நடத்தப்பட்ட ஸ்கேன்கள் அச்சத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ள இஷாந்த் சர்மா, ஆனால் என்சிஏ டெஸ்ட்டில் தான் பிட்னசுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
21ம் தேதி துவக்கம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி துவங்கி 25ம் தேதி வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 29ம் தேதி துவங்கி மார்ச் 4ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளிகளை பெறுவதற்காக இந்த போட்டிகளில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.