மும்பை : கடந்த 1990ல் இதே நாளில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை அடித்தார்.
இளம் வீரராக டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த 3வது வீரர் என்ற பெருமை அன்றைய தினமே பூர்ததியானது.
தன்னுடைய 17வது வயதில் அவர் இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். தற்போது இந்த நிகழ்வை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் நினைவு கூர்ந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் வயதான வீரருக்கு கல்தா.. இனிமே புது வீரருக்குத் தான் சான்ஸ்.. தோனி அதிரடி திட்டம்!
கடந்த 1990ல் இதே நாளில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தன்னுடைய முதல் சதத்தை அடித்தார் சச்சின் டெண்டுல்கர். ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெற்ற இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தவித்துக் கொண்டிருந்த நிலையில் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், 189 பந்துகளில் 119 ரன்களை குவித்து அந்த போட்டி டிராவாக காரணமாக இருந்தார்.
இதையடுத்து அவருக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. தனது 17வது வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த 3வது இளம் வீரர் என்ற சாதனை இதன்மூலம் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்தது. இந்நிலையில், இந்த சாதனையை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளது.