வந்தது மழை
அதன்படி போட்டி துவங்குவதற்கான நேரமும் வந்தது. அதோடு மழையும் வந்தது. அதனால் திட்டமிட்டப்படி சரியான நேரத்துக்கு போட்டி தொடங்க வில்லை.
மழையால் தாமதம்
முக்கியமான இந்த போட்டி, தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இந்த போட்டி முக்கியமானதாகும். போட்டி துவங்கும் முன்பு, அதற்கான டாஸ் போடப்பட்டது.
பயிற்சி எடுத்தேன்
ஆனால், வழக்கம் போல பெங்களூரு கேப்டன் கோலி அந்த டாசிலும் தோற்று விட்டார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: டாஸ் போடுவதற்காக நான் பயிற்சி செய்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
10 முறை டாசில் தோல்வி
13 போட்டிகளில் 10 முறை டாசை இழந்துள்ளேன். இந்த மைதானம் இரண்டு அணிகளுக்கும் சாதகமான ஒன்றாக இருக்கும். எனவே சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த விரும்புகிறோம்.
மகிழ்ச்சி
மேலும், இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளன. எனவே இந்த போட்டியினை மகிழ்ச்சியாக சுதந்திரமாக விளையாட விரும்புகிறோம் என்று கூறினார்.