3 நாடுகள் நடத்தின
1996ம் ஆண்டு உலக கோப்பை தொடரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இனணந்து நடத்தின. அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் 2வது முறை உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இலங்கை மண்ணிலோ முதல் முறையாக இந்த தொடர் நடைபெற்றது.
இலங்கைக்கு கோப்பை
அந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி கொண்டது இலங்கை அணி. லாகூரில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி போட்டியில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. இன்று வரை ஒரு முறை தான் உலக கோப்பையை இலங்கை வசம் வென்றிருக்கிறது.
2 போட்டிகள்
இலங்கை அணிக்கு இந்த தொடரில் அதிர்ஷ்டம் அடித்ததே என்று சொல்லலாம். அதாவது, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பாதுகாப்பின்மையால் கொழும்புவில் சென்று லீக் போட்டிகளில் பங்கேற்க மறுத்தது. இதனால் இலங்கை அணி இரு போட்டிகளிலும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதே ஆஸ்திரேலியாவை பைனலில் வீழ்த்தியது.
தோல்வியடைந்த இந்தியா
இலங்கை அரையிறுதியில் இந்தியாவை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொண்டது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 252 ரன்களை குவித்தது. இந்திய அணி சேசிங்கில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
ரசிகர்கள் கலாட்டா
இந்த தொடரில் ஒரு கட்டத்தில் சச்சினின் அருமையான பேட்டிங்கால் இந்திய அணி வலுவாக இருந்தது. 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 என்றிருந்த அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் என நிலைகுலைந்தது. ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து கலாட்டாவில் ஈடுபட்டனர். போட்டி நிறுத்தப்பட்டது. இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது. களத்தில் இருந்த காம்பிளி கண்ணீர் விட்டபடியே சென்றார்.
சச்சின் முதலிடம்
இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் 523 ரன்களை விளாசி அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார், அதேபோல் அணில் கும்ளே 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
தோனியின் சிக்சர்
2011ம் ஆண்டு இந்தியர்களால் மறக்க முடியாத ஒன்று. உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் தோனி விளாசிய மேட்ச் வின்னிங் சிக்சர் மீண்டும் மீண்டும் நம் கண் முன்னே வந்து கொண்டே இருக்கும்.
உரிமை பறிப்பு
2011ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் 2009ம் ஆண்டில் இலங்கை வீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகளில் தாக்குதலில் சிக்கினர். அதனால் பாகிஸ்தான், சர்வதேச போட்டிகளை தனது நாட்டில் நடத்தும் உரிமை பறிக்கப்பட்டது. இதனால் இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் நடத்த திட்டமிட்டிருந்தன.
முதன் முறையாக நடந்தது
இரு சொந்த மண் அணியான இந்தியா மற்றும் இலங்கை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இரு ஆசிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதியது இப்போது தான் நடந்தது.
இலங்கை அபாரம்
மும்பை வான்கடே மைதானத்தில் 2011ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி பைனல். இலங்கை கேப்டன் சங்கக்காரா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஜெய வர்த்தனேவின் சிறப்பான சதத்தினால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
மோசமான துவக்கம்
இந்திய அணியின் துவக்கம் மிக மோசமாக இருந்தது. ஆட்டத்தின் 2வது பந்திலேயே சேவாக் அவுட். சச்சின் டெண்டுல்கர் 18 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். அதன்பின் இளம் வீரர் விராட் கோலி களமிறங்கி காம்பீருடன் விளையாட தொடங்கினார். இருவரும் இணைந்து அணியை மீட்கும் முயற்சியை தொடங்கினர்.
காம்பீர் சிறப்பு
கோலி தனது விக்கெட்டை இழப்பதற்கு முன்பாக காம்பீருடன் இணைந்து 83 ரன்கள் சேர்த்து, அணியின் ஸ்கோரை 114 ஆக உயர்த்தினர். தோனி நம்பர் 5 பேட்ஸ்மேனாக களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை காம்பீருடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்.
இந்தியாவுக்கு நெருக்கடி
இருவரும் சேர்ந்து 109 ரன்கள் சேர்த்தனர். காம்பீர் 97 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த பேட்ஸ்மேனாக யுவராஜ் சிங் களமிறங்கும் போது இந்திய அணி வெற்றி பெற 52 பந்துகளுக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி விக்கெட்டுகள் ஏதும் விழாதவாறு நிதானமாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தது.
ஆட்ட நாயகன் விருது
தோனி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். அவருக்கு யுவராஜ் சிங் கை கொடுத்தார். தோனி 79 பந்துகளை எதிர்கொண்டு 92 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.
இந்தியா சாம்பியன்
இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு தனது 2வது உலக கோப்பையை வென்றது. யுவராஜ் இந்த உலக கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
2015ம் ஆண்டு உலக கோப்பை
2015ம் ஆண்டு உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகள் நடத்தின. 2வது முறையாக இந்த இரு அண்டை நாடுகளும் இந்த தொடரை நடத்தின. இரு அணிகளுமே 2015 உலக கோப்பை தொடரில் தகுதிச் சுற்று மற்றும் அரையிறுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிக்கு தகுதி பெற்றன.
7வது உலக கோப்பை
நியூசிலாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு இது 7வது உலக கோப்பை இறுதி போட்டியாகும். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸி.க்கு கோப்பை
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சால், நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலிய அணி இதனை எளிதாக சேஸ் செய்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5வது முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்ததது.