5வது பந்தில் நடந்தது என்ன?
போட்டியின் முதல் இன்னிங்சின் 49வது ஓவரில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஓவரை வங்கதேச வீரர் முஸ்பிகுர் ரஹீம் வீசினார். 5வது பந்தை எதிர் கொண்டவர் ஒசேன் தாமஸ். பந்தை அடிக்க முயன்று தாமஸ் அதை தவறவிட, பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது.
|
ஸ்டெம்பில் மோதிய பேட்
அப்போது எதிர்பாரதவிதமாக தாமஸின் பேட் ஸ்டெம்பில் பட, பெயில்ஸ் கீழே விழுந்தது. வங்கதேச வீரர்கள் அதை அவுட் அறிவிக்குமாறு நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால் தாமஸ் பந்தை அடிக்க முயற்சி செய்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் போது தவறுதலாக பேட் ஸ்டெம்பில் பட்டதால் நாட் அவுட் என்று அவர்கள் அறிவித்தனர்.
1998ல் நடந்தது
இதேபோன்று 1998ம் ஆண்டு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அது. ஒரு முனையில் அணியின் நட்சத்திர பவுலர் ஷான் பாலக் பவுன்சராக பந்துவீசினார். அந்த பந்து நேராக மார்க் வாக்கை தாக்க, திணறிய அவர் நகர்ந்து செல்கிறார்.
அவுட் இல்லை
அப்போது அவரது பேட் ஸ்டெம்பில் பட்டு பெயில்ஸ் கீழே விழுந்தது. அதை தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட் என முறையிட, நடுவர்கள் விதி எண் 35ன் கீழ், நாட் அவுட் என்று அறிவித்தனர். இந்த சம்பவத்தை தான் தற்போது கிரிக்கெட் வல்லுநர்கள் நினைவு கூறுகின்றனர்.